வஞ்சகம்
வஞ்சகம்
முன்னோர் உயிர் பிரிந்து...
தொலைவிலிருக்கும் என் இதயம்
துன்புறும் என்று எண்ணியதில்லை
என் உடல் தனியே
உயிரை உன்னிடம் கொடுத்து
உருகிய வாழ்க்கை
விழிகளில் கசிந்து
முள்ளின் மீது நடக்கிறேன்...
கண்ணாடி இதயத்தில்
கல் வீசிபார்க்காதே...!
நொறுங்குவது என் உடலல்ல - உன்
உயிர் மனம் நொந்து போகமல்
மடி சோர்ந்து போகமல்
உன் உயிர் கொன்று தின்கிறாய்...
நாடி நாளமென்
குருதி விளையும் குழல்கள் கூட
உன் காதல் சொல்லி உலாவரும்
கலங்கரை போல் உன் காதல் ஒளிராதா...?
புற்றீசல் பறந்தெல்லாம் இறந்த பின்
வரும் ராஜாவின் காதல் காரமாகிற்றோ
கடைக்கண்ணில் நின்று
வெண்ணிலா விழி சமைத்து பாரு
நெஞ்சில் வஞ்சகம் வைத்து
வேசியாகிவிடாதே....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக