திசைகளும், பருவமும்
திசைகளும், பருவமும்
காலையில்
சூரியன் கண்வழித்து
எழுந்து நின்ற உன் உடல்
பின் முதுகு மேற்கிருந்த
அழுத்தம்,
வடக்கே உடல் தாங்கும்
வாடைக்காற்றும்
தெற்கே உடல் பெயரும்
சோழக் காற்றும்,
அன்று! அம்மா நிலாச்
சோறுட்டியதும்
தென்றலின் வழியில்
திசைகள் தெரிவித்ததும்
இன்றும் ஞாபகப்படுத்தும்.
இன்றும் திசைகள் அறிய…
பெயரில்லாப் புயல்களும்
சூறாவளி போல் என்னை
அடித்துச் செல்ல
மீண்டெழுந்து திசைகள்
நோக்கிய போதும்
வாடைக்கும், கச்சானுக்கும்
என் உடல் வளைந்து
மீண்ட போதும்
என் கையில் இல்லை
திசையறிகருவி.
இன்றைக்கும் நினைவுக்கு வரும்
தெற்கும், மேற்கும்
மேலாக தழுவிச் சென்ற
கத்ரீனா! வில்மா!
நாளைக்கு பருவங்கள் மாறலாம்
திசைகளும் மாறலாம்...