2010-03-30

கடவுளின் படைப்பு!

கடவுளின் படைப்பு!

பெண்ணைப் படைத்த கடவுளே
என்மேல் என்ன மோகமோ
நானும் உன்னை வணங்கும் போது
நீயா எனக்கு வரமொன்று தந்தாய்

கண்கட்டி காதலிக்க வைத்தாய்
ஆணிண் கண்ணை மூடிப்போட்டாயோ
அவனை நினைத்து உயிரை இழந்து
தவிக்கிறேன் காதலின் வலியால்

கலர்கலராய் கனவுகள் தந்தாய்
காதலில் கறுப்பு வெள்ளை கனவுகளோ
கண்களை நினைத்து கனவை இழந்து
தவிக்கிறேன் கடவுளின் படைப்பால்

நேற்று இன்று நாளை என்று
காதலனைத் தேடுகின்றேன்
நீயாய் என் முன் வந்து நின்றால்
நானும் உன்னை முத்தமிடுவேன்

உனக்கும் இல்லை உறக்கம்
அதிலும் இல்லை இரக்கம்
பெண்ணைப் படைத்த கடவுளே
என் மேல் என்ன மோகமோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக