2007-03-08

காதல் சொல்வாயா?



காதல் சொல்வாயா?

பூமிக்குள் வாழும் வானங்கள்
அழகான மின்னலோவியம்
இணையற்ற இசை பாடும்
தூறலாய் வந்து பூமி நனைப்பாய்
உனக்கான என் காதல் சொல்வாயா?

காவெனக்கரையும் காகங்கள்
உன்னிடம் இரை தேடிவரும்
உமிழும் எச்சில் சுவைக்காக
உன் பாசம் புரியாமல் தவிக்கும்
உனக்கான என் காதல் சொல்வாயா?

ஊர் பேசும் உற்றார் பேசும்
சுட்டபின் சுடுமென்று பலர் பேச்சும்
புனிதமான வார்த்தைகள் புரியாது
உன் புனிதம் புரியாது அவர்களுக்கு
உனக்கான என் காதல் சொல்வாயா?

பாடிப்பாடி திரியும் பறவைகள்
காதலில் ஜோடிகட்டித்திரியும்
அந்தியுறையும் விருட்சம் நடுவே
விளையாடித்திரியும் அடிமனதை வருடும்
உனக்கான என் காதல் சொல்வாயா?

காற்றுவாங்கும் கரையோரம்
நண்டுகள் போடும் நளினக்கிறுக்கல்கள்
அலைகள் அதை அசிங்கமாக்கி போகும்
தென்றலும் மௌனமாய் வார்த்தை சொல்லும்
உனக்கான என் காதல் சொல்வாயா?

மின்மினிகள் பரிவாரம் சூழ
தனிமையிலே முழுமதியாய் தவிக்கும்
பகலுக்காய் அர்த்தங்கொள்ளும்
பகலவுனும் கனவொளித்துப்போவான்
உனக்கான என் காதல் சொல்வாயா?

வானத்தின் வண்ணமெடுத்து
காதலுக்காய் வடித்தகவிதைகள்
வெள்ளைக்காகிததில் வெறுமையாய்
பகல் கனவாகிப் போனதாய்!
உனக்கான என் காதல் சொல்வாயா?

வண்ணத்துப்பூச்சிகள் வசைபாடும்
வண்ணப்பூங்காவில் மலர்கள்
அந்நிய வருகைக்காய் மலரப்பட்டு
புதுத்தெம்புடன் பூத்துக்குலுங்கும்
உனக்கான என் காதல் சொல்வாயா?

தணிக்கை



தணிக்கை

சூரியன் செந்தீயில் வெந்தெழுவான்
பிரசாரங்கள் புளுதிகலைக்கும்
பறவைகள் பிரசாரங்கள் புரியாது!
அரசியலுக்காயிருக்காது...
அக்குவேறு ஆணிவேறாக
பாலிலிட்ட நீரை மீட்கும்
அன்னபட்சி
துப்பாக்கியில் தோட்டாக்களை
வேறாக்காது விலக்கு!
வடகிழக்கிலிருந்து கடத்தபடும்
வெண்புறாக்கள் வேறிடங்களில்
குருதிகொடுக்கின்றன...
இருவுகள் சுவாசம் தொலைக்கும்
பகலோடு விளையாட
இதயங்கள் துடிக்கும்
விடிந்தால் படபடவென பயப்பிடும்...
சுதந்திரத்தின் குரல்வளைகள்
நசுக்கப்பட்டு சுவாசம் மூச்சுமுட்டும்
வாடகைக்கும் வாங்கமுடியாமல்
அவசரகாலச்சட்டங்கள்
அத்துமீறி ஆளைக்கொல்லுகின்றது.
உரிமைகள் எல்லாம் வாடகைக்கு
வட்டி வாங்கிக்கொண்டிருக்கிறது.
முதலாளி வர்க்கம்
மூச்சுமுட்ட ருசிச்சு கொல்கிறது
பணக்காரன் ஏழை என்ற
வாதப்பிரதிவாதங்கள்
மனிதங்கள் புரிந்தால் - ஏது
இனமதக்கலவரங்கள்...
தணிக்கையும் தணிக்கப்பட்டு...

வீணடிக்கப்படும்




வீணடிக்கப்படும்...

புதியதோர் உலகம் புகுவோம்
முடியுமா? பாதைகள் பளிங்காகுமா?
உண்மைதான் ஆராச்சிகள்
தடம்புரளவில்லை தொடர்கின்றன...
அந்த வெண்ணிலவோடு
நிறுத்தப்படவுமில்லை...
அதுவும் நடக்கும்!
இடி மின்னல் புயலென ஜம்பூதங்களும்
அவற்ரோடு அவதரித்துலாவி
உயிர் கொண்டுபோகும்...
அதுவும் நடக்கும்!
ஆங்காங்கே
ஆயுதங்கள் வாங்கி
கல்லறை பூமியை
கந்தக பூமியாக்கிப்போவர்...
அதுவும் நடக்கும்!
ஆளில்லா பறவையெல்லாம்
ஆரவாரம் போட்டு வேவுபார்க்கும்
ஆலமரத்தோரமொதுங்கும்
உயிரெல்லாம் கதறியளும்...
உறுமியவன் உயிர்கொண்டு போவான்...
மனிதங்களின் அவலங்கள்
காற்றடைத்த பலூன்கள்!
கதறியவன் குரல் ஏகி
அந்தி அஸ்தமனமாகி
அதிகாலை புலரும்வரை ஆரவாரிக்கும்
காலைபுலர்ந்தால் போதும்
அப்பாவி குடிசை முகட்டின் கீழ்
வெள்ளை விரிப்புக்கள்...
சோகத்தில் உறவாடும் உதிரங்கள்
ஊர் கூடி ஒப்பாரிவைக்கும்
கண்ணீரும் கம்பலையுமாக
குடிலருகுக் குடிசைகள்...
மலர்களால் மலர்த்தப்பட்டு
கிடக்கும் குடிசையறை
முனங்கலும் அழுகையும்
வெற்றுடல் உள்ளிருப்பதை
சைகை காட்டும்... - ம்...
பாடைகட்டி படுக்கையில்
கைகளும் கால்களும்
அவிழ்க்கப்படாமல் அணியப்பட்ட
வெள்ளைத்துணி முடிச்சுக்கள்...
தைலைவணங்கி நெளிந்தொடி
செத்துப்போகும் பத்தியின் ஆவிகள்
காலடிவணங்கி ஒளியேற்றி
ஆடிக்கிடக்கும் குத்துவிளக்கு
அதுமுன்னே பொட்டிளந்தவள்
கண்ணீர் கோலங்கள்
ஆயுதக் கொல்லர்கள் இருக்கும்வரை
அதுவம் நடக்கும்!
மனிதனை மனிதன்
அடித்துக்கொல்லும் பாசுரத்தை
தமிழீழ இதிகாசம் சும்மா விடாது
அகிம்சைப்போராளிகள்
அடங்கும் வரை
ஆயுதப்போராளிகள் அலைக்களிப்பர்...
அவரோடொத்துறவாடும் போரரக்கர்கள்.
நீ எங்கிருந்து வந்தாய்
எதற்காக வந்தாய்
வந்த இடம் பிரியாது
உன்னுறவோடு விளையாடும்
உன் நண்பர்கள் அழுகிறார்கள்
அது உனக்கு கேட்கும்
அதுவும் உனக்கு பிரியாது!
கட்டம் கட்டமாய்
கண்டதுண்டமாக்கியவர்கள்
அறிவர் நாமெல்லாம் யாரென்று...
விசாரணைகள் நடக்கும்
அதுவும்
உடலோடு துப்பாக்கிரவைகளும்
கொள்ளிக்கட்டைகளும்
நீதியின் இருக்கைக்கான பதில்கள்
அதுவும் இனாமாகக்கிடைக்கும்...
மஞ்சல் கயிறு முடிச்சவிழ்த்து
மாஞ்சி (விலங்கு) பூட்டுக்களாகும்
விவகாரத்தில்லாமல்
விவகாரத்துக்கள் விதவை பட்டம்
வீணடிக்கப்படும்...

2007-03-03

தசாவதாரத்துடன் கூடவொன்று


தசாவதாரத்துடன் கூடவொன்று

ஆயிரம் காலத்து பயிர்
கபடிகூட வளர்க்கப்படவேண்டியதுதான்
அதிலும் கிட்டிப்புள்ளும்
அங்கவினமாகிக்கொண்டு
இதுபோலவெ அதுவும்
மெருகூட்டி வண்ணமிட்டுக்கிடக்கின்றது

தமிழன் தனித்துவம்
வெள்ளைத்தோல் திருடிக்கொண்டது
யாரும் அறியோம் அதுதான் இதுவென்று.
மாற்றங்கள் சிலருக்கு பிடிக்காது
மாறியதும் மாட்டிக்கொண்டதும்
அவர்கள்தான்.

விருட்சம் நடுவே
வண்ணப்பறவைகளின் பரவசம்
ஊர் குருவிகள் சுற்றிநின்று
உல்லாசப்படுத்தும்...

தொலைவினில் தெரியாமல்
திண்டாட்டங்கள்
பகல் என்றால் சூரியனின்
ஆராதனைகள்
இரவினில் சந்திரக்குளியல்
விளக்குகளின் விருந்தோம்பல்

உலக அரங்கில் மாறுபடா
ஒற்றுமைக்கான தொடர்ச்சி
அதிலும் வேற்றுமைக்கான முள்ளும்
பின்னணியில் உருவாக்கும் பணப்புரட்சியும்

உலகெல்லாம் அவதிப்படுத்தும்
ஒரு அனுமானம்
அவசரத்தில் அது புரியாது
அவ்வளவு ஆடம்பரதுக்காக
அல்ல திறமகளின் தனித்துவம்


தசாவதாரத்துடன் கூடவொன்று
கூட்டத்தின் நடுவே கூடியாடும்
கோலாகல்த்திருவிழா அது!

புதுமைப்பெண்


புதுமைப்பெண்

எண்ணங்கள் வளர்த்த
காரிருள் கருகிய கூந்தல்
சாதனை படைக்க எழுந்திடும் கைகள்
ஆணாதிக்கத்தின் எதிர்நிலைவாதம்
குற்றம் புரிந்திடும்

முடிந்தாலும் முடியாதென்று
மூடநம்பிக்கைகளுடன் கூடப்பிறந்தவர்கள்
மல்லிகையும் சமவாதம் புரியும்
அறியாது மிதவாதம்

துணிந்து நின்று போராடு
ஆயுதங்கள் எதுக்கு
அடிமைவாதங்கள்
முகவரிகள் தொலைக்கும்

அது கண்டு நடுங்காதே
ஆயுதங்களும் அழைக்கும்

சமத்துவம் புரியான்
எல்லை மீறு
சமத்துவம் சமனில் கிடக்கும்

சிவப்புதேசம் களங்கப்படுத்தும்
இருப்பிடத்தை நிரந்தரமாக்கிக்கொள்
வெளித்தேசம் வரவேற்கும்

அழகும் வர்ணனைகளும் எதற்காக
விலை பேசப்படுகின்றன
விற்பனைக்காக விலை
பேசப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்

கறுப்பு சந்தைகள் கலைக்கப்பட
வேண்டியவை
உலகசந்தை விற்பனைக்காரர்கள்
ஒப்பனைத்தோலுரித்து
இருப்பிடங்கள் தொலைக்கப்படவேண்டும்

அடுப்பங்கரை காரிருள்
கரிபடிந்தவையெல்லாம்
வெளிப்பட வேண்டும்
தடைகள் குழிதொண்டி புதைபடவேண்டும்

தேசத்தின் பிடிமானங்கள்
இல்லையாயின் தொலைந்து போகும்
எதிர்கால சந்ததிகள்

பாரதி படைத்த புதுமைப்பெண்ணாய்
புதுத்தெம்புடன் புதுத்தேசம் புனை
புகழ்பதிந்த பாதைகள் நீளட்டும்
படைப்புக்கள் புகழட்டும்

வெளிச்சத்திற்கு விலங்குடயட்டும்
வெற்றிப்படிகள் மிதித்திடு வெளியேறு
வெள்ளிக்கொலுசுகள் சத்தமிடு
அவதரிப்பாய் அவளாகத்திகள்வாய்...

காதல் ஓவியம்


காதல் ஓவியம்

உனக்கு தெரியும் நான்
சினேகிதன் என்று
நான் தெரிந்துகொள்ளவில்லை
நீ எனக்கு சினேகிதியாய்

நிமிஷங்கள் நீண்டு வருசங்களாகியும்
அப்படித்தான் தாமரையிலை
தண்ணீர் போல

பரதத்தின் பைந்தமிழ் நீ
சலங்கையோலி தீண்டும்
போதெல்லாம் பட்டென
புரக்கேறி உன்னையும் ஞாபகப்படுத்தும்

பூக்களுக்கு சொந்தக்காரன்
பறித்துக்கொண்டு பரவசமாக்கியதும்
என்னவள் உன்னினைவுகள்

பேரழகில் புதைத்த
உன் இதயக்குடிகாரன்

என்னிருக்கை
உன் இதயமாளிகை
உள்ளிருந்து கிறுக்கிய
காதல் ஓவியம்
உனக்கு வலிக்காது

உனக்கு விரும்பும்போது
நீயும் என் இதயமாளிகைக்குள்
கிறுக்கிப்பார் அதுவும்
காதலோவியமாய் மாறும்

கனவுகள் வந்துபோகும்
என்னவள் உன் வருகக்கானதொரு
கனவாய் வரக்கூடாதா?

உன் கனவுக்குள் வருவதெல்லாம்
நானாக இருந்தால் - அது
உனக்கு நிச்சயம் மறந்து போகாதா?

ஆயிரம் வார்த்தகள்
அள்ளிவீசும் உனக்கு தெரியாதா
எனக்கான வார்த்தைகளும்
உன்னிடம்தான் ஒளிந்துகிடக்கிறதென்று

எனக்கும் உனக்கும் புரியும்
ஆயிரம் மொழி
காதல்யுகம் இரண்டு போயும்
புரியவில்லை உன் மௌனமொழி

காதலுக்கு புரியுமோ
உன் மௌன மொழி புரிந்திருக்கும்
அதுவும் எனக்கு புரியவில்லை என்றோ
புரியவைத்திருப்பாய் புரியவும் வைப்பாய்.